Saturday, March 31, 2012

வரம் வேண்டும்..

இசைமீட்டும் குயிலோடு 
தலையாட்டும் மரமெல்லாம் 
தருவிக்கும் இளங்காற்றில் 
தன்மான தமிழ் வேண்டும் 

பாடுபட்டுப்பெற்றுடுத்து 
பசிநீக்க பாலூட்டி 
துயில் துறந்து உயிர் காத்த தாயை 
நீங்காத நிலை வேண்டும் ..

மனதுக்கு இதமான 
மகிழ்ச்சிக்கு உரமூட்டும் 
பேரின்பம் தரவல்ல 
மழலை மொழி வேண்டும்..

காவியங்கள் தலைகுனியும் 
கவிதைகள் வரைவதற்கு 
நினைவுகளின் இருப்பிடமாய் 
காதலிக்கும் நெஞ்சம் வேண்டும்
PhotobucketPhotobucket
Photobucket