காற்றலையில் மிதந்து கொண்டு
காதலியின் வீடுநோக்கி
தூது போகும் அழகான வெண்புறா
தொலைக்காட்சி திரையினிலே..
தூது போன வெண்புறாவோ
காதினிக்க சேதிசொல்ல
தூது கேட்ட காதலியோ
கனவுலகம் எட்டிப்பார்த்தாள்..
அங்காடித் தெருவினிலே
அழகான உருவினிலே
பணிவிலே திமிர்காட்டும்
பார்வையொன்று வீசியதே..
மான்விழி கெண்டையாள்
மெல்ல நிமிர்ந்து உற்று நோக்க
கண்களுக்கு விருந்தாகும்
விம்பமொன்று கண்ணில் கண்டாள்
ஆயிரத்தில் ஒருவனென்று
அடிமனது அறைகூவ
அடியவளோ அசைவின்றி
அவன் விழியில் கலந்து விட்டாள்..