இயற்கைக்கும் செயற்கைக்கும்
இடையில் ஒரு போராட்டம்
வயதுக்கும் பொலிவுக்கும்
நடுவில் ஒரு நல்வரவு
வீதி வரும் கிளிகளிலே
இல்லை பஞ்ச வர்ணம்
ஆனால் அவர் முகங்களிலோ
காணமுடியும் பலவர்ணம்
காறி உமிழ்ந்த பாக்கு நீர்போல்
சிரம்மேல் சிறு குட்டை
எண்ணெய் வைத்து தோயாமல்
சேவல் போலே ஒரு கொண்டை
நள்ளிரவில் மனைவியை
பார்த்து அலறும் கணவன்
காரணம் அவள் முகத்தில்
மோகினியில் உருவம்
கணவனுக்கு மரக்கறியும்
தன் அழகை மெருகேற்ற
துட்டுக்கு முட்டையும் வாங்கும்
பெட்டைக்கோழி..
உதட்டில் ருசி இல்லை என்றா?
உமிழ்ந்து கொள்ள பூச்சுக்கள்
பச்சைத்தமிழன் என்றுரைக்கவா
உடம்பினில் பச்சை குத்துக்கள்..
தானாய் வந்த மொட்டையை மறைக்க
தேடி வாங்கிய தலைமுடி சட்டை
காற்று வந்து துகிலுரிந்தால்
எங்ஙனம் மறைப்பார் அவர் சொட்டை?
ரகசியம் மறைக்க பெண்கள்
மூடும் ஒரு அதிசய திரை
திரைமரைவின் ரகசியம்
திடீரென மழை வந்தால் அம்பலம்
சாமிகளை தரிசிக்க செல்லும்
மாமிகளும் சாயம் பூசி
கற்பூர வாசனையை மிஞ்சும்
அவர் தெளித்த வாசனைத்தைலம்...
அழகுக்கு அழகு சேர்க்கும்
கிழவி தந்த வழிமுறைகள்
ரசாயன பூச்சுக்கள்
சேர்த்து வைக்கும் வடுக்கள் பல
இளமையை செப்பனிடும்
ஒப்பனைகள் பின்னாளில்
தெளிவான முகங்களை
கசங்கிகிடக்க வைக்கும்
No comments:
Post a Comment