படித்தவனோ பாமரனோ
சிரிக்க வேண்டும் என்றால்
கிடைக்க வேண்டும் பணம்
அயல் நாட்டின் அழகு காண
சொந்த வீட்டில் சொந்தம் சேர
இரவு வெளிக்கும் நிலவை ஏக
வேண்டும் அச்சடித்த காகிதம்
ஆசைகள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அதை நிறைவேற்றும் ஒரே இனம்
அதன் பெயர் தான் பணம்...
தட்சணை இல்லாவிடில்
தட்டையும் முறைத்துப்பார்ப்பார்
கருவறையுள் நுழையும் உரிமை
கொண்ட பூசாரி ..
பத்தினியாள் முகம் மலர்ந்து
பெத்த பிள்ளை வயிறு குளிர
அமுதளிக்க பானையில் சோறு வர
தேவை பணம் ...
கிழிந்த பாய்க்கும் கட்டிலுக்கும்
குடிசைக்கும் மாடிக்கும்
இடையில் இருக்கும்
விரிசல் தான் பணம்..
பில்கேட்ஸும் அம்பானியும்
உலகமெல்லாம் பேசுதே
காரணம் அவர் குணமா?
இல்லை பணமே ...
ஆறறிவு ஜீவன் எல்லாம்
கட்டித்தழுவ ஆசைப்படும்
விலைமகள்..
வெட்டியான் கையில்
பணம் திணித்தால் தான்
கட்டையும் வேகும்..
No comments:
Post a Comment