உன் பார்வையின் நீளம் நைல் நதியா?
உன் கூந்தலில் நானும் நீந்த வரவா?
என் கனவுகளில் உன் கலர் படமா?
மோனாலிசா தான் உன் இயற்பெயரா?
நீ குடியிருப்பதெந்தன் மனச் சிறையா?
உன்னை விட்டு பிரியேன் உயிர் நிழலாய்.
பாசத்தில் எந்தன் தாய் நீயா?
கோபத்தில் கண்டிக்கும் கண்ணகியா?
சேவைகள் செய்வதில் தெரேசாவ?
பணிவிடை செய்வதில் வாசுகியா?
துன்பங்களை சந்திப்பதில் சீதையா?
சிலுவைகளை சுமப்பதில் கடவுளோ?
மார்கழி மாதத்து பனித்துளியா ?
நீ என்னை தீண்ட வரும் மழைத்துளியா?
தூண்டி விட்ட ஒளி தரும் திரிநீயா?
என் மனதை திருவிட்ட திருடியா?
எனக்கென வந்துதித்த தேவதையா?
நீதான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணோ?
No comments:
Post a Comment