பத்து திங்கள் பத்திரமாய் கருவோடு எனை தாங்கி
சீராட்டி தாலாட்டி ரத்தத்தை பாலாக்கி எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து காவலனாய் நீ மாறி
என் பசியை நீ போக்கி பசிமறந்த பிள்ளையானாய்
கதறி அழும் வேளைகளில் ஓடி வந்து கட்டிடுவாய்
காய்ச்சல் வந்து நான் கிடந்தால் கை மருந்து நீ கொடுப்பாய்
மழையில் நான் நனைத்தால் முந்தானை குடை பிடிப்பாய்
மழையில் நான் நனைத்தால் முந்தானை குடை பிடிப்பாய்
முள் தைக்கும் பாதை தனில் எனக்காக செருப்பாவாய்
உன் வாழ்க்கையை தீயாக்கி அதிலே நீ திரியானாய்
என் பாதையின் இருள் நீக்க நீ அங்கே ஒளி தந்தாய்
என் நெற்றி வியர்வை துளி அகற்ற விசிறி ஆனாயே
யார் என்னை வெறுத்தாலும் நீ என்னை வெறுக்கலையே
பிறக்கும் போதும் வலி கொடுத்தேன் பொறுத்து கொண்டாய்
பிறந்த பின்பும் துயர் கொடுத்தேன் சகித்துக்கொண்டாய்
படிக்காத நீ என்க்கு பட்டமும் வாங்கி கொடுத்தாய்
படித்த நான் உனக்கென்ன கைமாறு செய்வேனோ?
No comments:
Post a Comment