இரவுகளை தொலைத்தோம்
தூக்கத்தை வெறுத்தோம்
கனவுகளை புதைத்தோம்
கண்ணிமைக்க மறுத்தோம்
கவிதை பல கேட்டோம்
நிலவினை ரசித்தோம்
மலரிடம் கதைத்தோம்
சுவரிடம் மோதினோம்
தலையணை கிழித்தோம்
பாடலும் பாடினோம்
சலங்கை இன்றி ஆடினோம்
தனிமையிலும் சிரித்தோம்
சிறகுகளும் பூட்டினோம்
சிலுவைகளும் சுமந்தோம்
கண்ணீரிலும் தவித்தோம்
இத்தனையும் காதலினால் ...
No comments:
Post a Comment