வாழ்கையின் வனப்பில் கூந்தலிலே
நீந்தும் பூக்கள் எல்லாம் வாடிவிடும்
காலநிலை மாறினாலும் உதிராமல்
காத்திருந்து வாடாமல் பூத்திருந்து
வாழும் காலமெல்லாம் வாசம் வீசும்
உயிர்களில் மட்டும் பூக்கும் நட்பு..
கொண்ட காதல் சிலநேரம் தொண்டை
முள்ளாய் சிக்கும் போதும் நட்பு மட்டும்
உடனிருந்து காதல் தந்த ரணங்களை
கணங்களிலே அழித்து விட்டு விழி
தந்த கண்ணீரை தன் கைகுட்டையில்
தாங்கி நிற்கும் சுமைதாங்கி நட்பு ...
ஜாதி மத பேதமெல்லாம் வாய் சொல்லில்
வெறுக்கும் உலகில் ஜோதியாய் எரிந்து
ஜாதி மத பேதங்களை சுட்டெரிக்கும் நட்பு
பணம் தின்னும் கழுகெல்லாம் கழுத்தை
நெருடும் வேளைகளில் சுவாசிக்க வைத்து
மறு பிறப்பு கொடுக்கும் தாய்மை நட்பு..
வாழ்க்கை கடலில் மூழ்கி நட்பெனும் முத்தெடு
விலையில்லா ரத்தினங்கள் தலைகுனியும் ......
No comments:
Post a Comment