கால நீரோடையில் கசங்கிப்போய்
கிடக்கிறது வாழ்கையின் இலட்சியவெறி
தட்டி கொடுப்பவரும் துட்டுக்கு
கைநீட்டும் சீர்கெட்ட உலகம் இது
ஓட்டை விழுந்த பானையாய்
உடலை விட்டு உயிர் கசியுது
துடுப்பிழந்த ஓடம் போலே
கரை சேர ஏங்குது ......
பொறியில் சிக்கிய எலியாக
நெரிகிறது என் கழுத்து
நொறுங்கிய கண்ணாடி வளையலாய்
சிதறியது இள மனசு...
வாழ்க்கை எனும் வண்டிச்சக்கரத்தில்
அச்சாணியாய் அகப்பட்டேன் நான்
சக்கரம் சுழல்கிறது சரியாக
அச்சாணி நெரிகிறது அசையாமல்...
No comments:
Post a Comment