காதலுடன் சண்டையிட்டு என்னை விட்டு
சென்றுவிட்டாய். சென்றுவிட்ட உன்னை
எண்ணி கொன்றுவிட்டேன் என் மனதை
சிறை வைத்து விட்டேன் என் நிழலை
என் மனகோட்டையின் முழுநிலத்தில்
கட்டிவைத்தேன் காதல் கோட்டை
ராணியில்லா கோட்டையிலே
சாமரங்கள் சபிக்கிறதே ...
தேவதை இறங்கி வந்து காதல்
கொண்டதென நான் இருந்தேன்
மேகம் தரும் தண்ணீரை விட
கண்களில் தந்தாய் கண்ணீர்...
செங்கல் சூளையிலே
சுட்டு விட்டாய் என் மனதை
கரை சேர்ந்த மீனாக
துடிக்கிறேன் மனதாலே..
No comments:
Post a Comment