Friday, November 25, 2011

தன்னம்பிக்கை


காயம் இன்றி ஒருநாளும்
கருங்கல் சிலையாகாது
நெஞ்சில் துளை வாங்காமல்
புல்லாங்குழல் கீதம் தராது..

அச்சாணி நெரிபட்டால்
சக்கரம் சிரிக்கும்
வலிதந்த வாழ்கை தானே
சரித்திரம் படைக்கும்..


கூடு கட்டும் குருவி
ஒன்றும் படிக்கவில்லையே
இருந்தும் அது கூடு கட்டும்
தான் கொண்ட நம்பிக்கையாலே

அலையாய் அடியடித்தால்
கல்லும் கரையும்
தன்னம்பிக்கை கொண்டு
நீ சென்றால் வானமும் உன் வசமே ...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket