வாழ்கையின் வனப்பில் கூந்தலிலே
நீந்தும் பூக்கள் எல்லாம் வாடிவிடும்
காலநிலை மாறினாலும் உதிராமல்
காத்திருந்து வாடாமல் பூத்திருந்து
வாழும் காலமெல்லாம் வாசம் வீசும்
உயிர்களில் மட்டும் பூக்கும் நட்பு..
கொண்ட காதல் சிலநேரம் தொண்டை
முள்ளாய் சிக்கும் போதும் நட்பு மட்டும்
உடனிருந்து காதல் தந்த ரணங்களை
கணங்களிலே அழித்து விட்டு விழி
தந்த கண்ணீரை தன் கைகுட்டையில்
தாங்கி நிற்கும் சுமைதாங்கி நட்பு ...