வருடம் ஒருமுறை
பிறக்கும் பிறப்பே
உன்னை வரவேற்க
உலகமே தயார் நிலையில்..
கதிரவனின் ஒளிவாங்கி
கதிரெல்லாம் ஒளியேற்றி
உழவன் வாழ்வில் மெருகேறும்
சிறப்பாண்டாய் நீ வருக
கருமுகில் படையெடுத்து
அடாதமழை விடாது பெய்து
தொற்று நோய் உருவெடுக்கும்
காலனாய் நீ வேண்டாம்
நாற்புறமும் சுற்றங்கள்
நண்பர்கள் உறவினர்கள்
பாசமழை பொழியும்
நல்லாண்டாய் நீ வருக..